Sunday 1 July 2012

தலைவலி


தினசரி காலை பசு நெய் (உருக்கி) இரண்டு மூக்கு துவாரத்திலும் 5 சொட்டு வீதம் தொடர்ந்து 15 நாள் இங்க் பில்லர் மூலம் விடவும்.
இரண்டு கடுக்காய் விதை நீக்கி 10 கிராம்பு தட்டி 1  1/2 டம்ளர் தண்ணீரில் கலந்து 1/2 டம்ளர் அளவு கொதிக்க வைத்து காலை மற்றும் இரவு குடிக்கவும்.

மூலம், மலம் கட்டுதல் நீங்க


தினசரி இரவு சாப்பாட்டுக்கு பிறகு 1/2 ஸ்பூன் கடுக்காய் பொடி சுடு தண்ணீரில் கலந்து சாப்பிடவும்.
மூலம் : தினசரி இரவு மாசிக்காய்-ஐ நீர் விட்டு உரைத்து, ஆசனவாயில் பூசவும் (15 நாள்).

மிகு வியர்வை


சங்கு பூ இலை பிழிந்த சாறு, இஞ்சி சாறு, தேன் (மூன்றும் 12 ஸ்பூன் அளவு) தினசரி காலை, இரவு தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிடவும்.

கண் சிவத்தல், கண் பார்வை கோளாறு


தினசரி பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, அகத்திக்கீரை (வாரம் இருமுறை) சாப்பிடவும்.
தினசரி காலை வாய் கொப்புளிக்கும் முன் வரும் எச்சில் எடுத்து கண்களில் வைக்கவும்.

சர்க்கரை நோய் குணமாக


தினசரி இரவில் செம்பு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் சீரகம், 10 கறிவேப்பிலை, 5 வேப்பிலை, 4 லவங்கப்பட்டை கலந்து காலை வெறும் வயிற்றில் வடிகட்டி சாறை மட்டும் குடிக்கவும்.

பாகற்காய் தினசரி சாப்பாட்டில் சேர்க்கவும்.
தினசரி காலை, இரவு நூல்கோல் காயை அரைத்து வடிகட்டி சாறு 1 டம்ளர் அளவு குடிக்கவும்.
தினசரி காலை, இரவு 1 வெள்ளை முள்ளங்கி அரைத்து வடிகட்டி சாறை மட்டும் குடிக்கவும்.

பித்தத்தினால் வரும் மாந்தம், பைத்தியம், தோடம் விலக


தினசரி காலை, இரவு சாப்பாட்டுக்கு முன்பு 15 கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் மஞ்சள் அரைத்து சாப்பிட்டு சுடுதண்ணீரில் குடிக்கவும். 20 நாள்